Dindigul: "என் உடன்பிறவா தம்பியை இழந்துட்டேனே" - திமுக நிர்வாகி கொலை.. மீளாத்துயரில் எம்.எல்.ஏ..!

கட்சிப்பணியில் இரவுபகல் பாராது அயராது உழைத்து வந்த உழைப்பாளி, மர்ம கும்பலால் கொல்லப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக திமுக வேடசந்தூர் தொகுதி எம்.எல்.ஏ வருத்தம் தெரிவித்துள்ளார்.

Kasi | Crime File Pic (Photo Credit: @Gandhirajan_MLA X / Piabay)

செப்டம்பர் 27, வேடசந்தூர் (Dindigul News): திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் (Vedasandur), பொன்னம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் மாசி. இவர் திமுக தெற்கு ஒன்றிய பொருளாளராகவும் பதவி வகித்து வருகிறார். மாசிக்கு சொந்தமான தோட்டம் ஒன்று கவுண்டம்பட்டி பகுதியில் இருப்பதாக தெரிய வருகிறது.

சரமாரியாக வெட்டிக்கொலை:

இந்த நிலையில், தனது தோட்டத்திற்கு சென்ற மாசி பின் மீண்டும் இருசக்கர வாகனத்தில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். அச்சமயம் அவரை வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று, அரிவாளால் சரமாரியாக வெட்டிச்சாய்த்து கொலை செய்தது. இந்த தாக்குதல் சம்பவத்திலிருந்து அவர் தப்பிச்செல்ல முயன்ற போதும், மர்ம கும்பல் விடாமல் துரத்தி படுகொலையை நிகழ்த்தி இருக்கிறது. வானிலை: அடுத்த 3 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. முழு விபரம் இதோ.! 

சம்பவ இடத்திலேயே பலி:

இதில் மாசி நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்ட நிலையில், வேடசந்தூர் (Vedasandur DMK Worker Killed) காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்விடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றிய காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையினர் உறுதி:

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால், அப்பகுதியில் லேசான பரபரப்பு உண்டானது. இதனால் காவல்துறையினர் அவர்களிடம் சமாதானம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். Madras High Court: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் ஸ்ரீராம் கல்பாத்தி இராஜேந்திரன்.! 

நிர்வாகியின் மரணத்திற்கு திமுக எம்.எல்.ஏ இரங்கல்:

திமுக வேடசந்தூர் தொகுதி எம்.எல்.ஏ காந்திராஜன் (DMK Vedasandur MLA S. Gandhirajan), மாசியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "என் மனதைச் சிதைத்த துயரமான இரங்கல் செய்தியை, மிகவும் வலி கலந்த இதயத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்: 26/09/2024 அன்று இரவு திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி - வேடசந்தூர் தெற்கு ஒன்றிய பொருளாளர், எனது உடன்பிறவா சகோதரர் மாசி அவர்கள் கொலை செய்யப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

மாசி அவர்களின் அர்ப்பணிப்பு, அரசியல் கடமைகளை மிஞ்சியது. வேடசந்தூர் தொகுதியில் கட்சியின் முக்கிய அச்சாணியாக இருந்து, கழகத்திற்காக உழைப்பு மற்றும் பொது சேவைகளில் அதற்கான அர்ப்பணிப்பு கொண்டு இரவு பகல் பாராமல் உழைத்தவர் சகோதரர் மாசி அவர்கள், அவருடைய இழப்பு இயக்கத்தினருக்கும் இயக்கத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள் அனைவருக்கும் ஈடு செய்ய முடியாதது.

சகோதரர் மாசி அவர்கள் நம்மை விட்டு பிரிந்துவிட்டாலும், அவரின் நினைவுகளும், சிந்தனைகளும் எப்போதும் நம் அனைவரின் மனங்களிலும் நினைவுகளிலும் வாழ்ந்து கொண்டே இருக்கும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நமது கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்" என வருத்தம் தெரிவித்துள்ளார்.

மாசியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த எம்.எல்.ஏ-வின் வலைதளப்பதிவு:

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement