Ladakh Accident: லடாக் இராணுவ வாகன விபத்தில் உயிரிழந்தோர் யார்?; விபரம் உள்ளே.!
பாதுகாப்பு பணிக்காக சென்றுகொண்டு இருக்கும்போது, எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களின் வாகனம் விபத்தில் சிக்கி 9 பேர் பலியான சோகம் இந்தியாவை கலங்க வைத்துள்ளது. எல்லையில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம்.
ஆகஸ்ட் 20, புதுடெல்லி (New Delhi): இந்திய இராணுவத்தினர் பயணித்த வாகனம், நேற்று லடாக்கில் உள்ள லேயில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் முதற்கட்டமாக 6 பாதுகாப்பு படை வீரர்களும், மருத்துவமனையில் 3 பேரும் என 9 பேர் பலியாகினர். இவர்களின் மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடி உட்பட பலரும் தங்களின் இரங்கலை பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், விபத்தில் பலியானோரின் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த விபத்தில், "ரமேஷ் லால், மகேந்திர சிங், விஜய் குமார், சந்திர சேகர், மன்மோகன், அங்கித், திரன்தீப் சிங், தேஜ்பால், போய்டீ வைபவ்" ஆகியோர் பலியாகி இருக்கின்றனர். Minister Slaps: “எனக்கு முன்னாடி எங்க போற?” – முந்திச்சென்ற தொண்டரின் காலரை பிடித்து இழுத்து பளார் விட்ட அமைச்சர்..!