Union Budget 2024: வீடுகளில் சோலார் பேனல்கள்.. இனி மின்சார கட்டணம் குறித்த கவலை வேண்டாம்.. நிர்மலா சீதாராமன் அதிரடி..!

இன்று மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

Nirmala Sitaraman (Photo Credit: @ANI X)

ஜூலை 23, புதுடெல்லி (New Delhi): மக்களவை மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 22 தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்படி, மாநில அரசுகள் பத்திரப்பதிவு கட்டணங்களை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஒவ்வொரு வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல் அமைப்பதால் மின் செலவை குறைக்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். 1 கோடி வீடுகளில் சோலார் பேனல்கள் அமைக்க 1.28 விண்ணப்பங்கள் பெறப்பட்டால், திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு எடுக்கப்படும். இதன் வாயிலாக மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரத்தை சோலார் பேனல்கள் வாயிலாக பெறலாம். சிறிய அளவிலான நியூக்ளியர் மின்சார உற்பத்தி மையங்கள் அமைக்க ஆலோசிக்கப்படும் என்றும் அறிவித்தார்.  உள்நாட்டு உற்பத்தியில் 3.4 % உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்காக ரூ.11 .1 இலட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மாநில அரசுடன் இணைந்து பல நகரங்களை வளர்ச்சிப்படுத்து மையமாக மத்திய அரசு இருக்கும். பீகார் மாநிலத்தில் வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக ரூ.11500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனத்திற்கு கடன் வழங்கும் வங்கிகளை 24 இடங்களில் கூடுதலாக நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். பேக்கரில் 2400 மெகா வாட் மின்னுற்பத்தி ஆலைகள் அமைக்க ரூ.21400 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். Income Tax Slabs Rate 2024: ரூ. 3 லட்சம் வரை ஆண்டு வருமானம் வாங்குபவர்களுக்கு வரி இல்லை.. வருமான வரி விகிதங்களின் மாற்றங்கள்..!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement