Earthquake Alert: லடாக்கில் இன்று காலை மிதமான நிலநடுக்கம்; தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவிப்பு.!
உலகளவில் இயற்கை பேரிடரால் 2024ம் ஆண்டு அழிவை சந்திக்கும் என எதிர்கால ஜோதிட கணிப்பு வல்லுனர்கள் கூறியுள்ள நிலையில், அதனை உறுதிசெய்யும்பொருட்டு ஆரம்பகட்ட அறிகுறிகள் தென்படுகின்றன.
ஜனவரி 30, லடாக் (Ladakh Earthquake): இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே மாநிலங்கள் அளவில் அவ்வப்போது லேசான நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகின்றன. நேற்று மற்றும் அதற்கு முன்தினம் கூட ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள சில நகரங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், லடாக்கில் உள்ள லே (Leh Earthquake) பகுதியில், இன்று காலை 05:39 மணியளவில் ரிக்டர் அளவில் 3.4 புள்ளிகள் மதிப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான சேதங்கள் இல்லை எனினும், அடுத்தடுத்த சிறிய நிலநடுக்கங்கள் மிகப்பெரிய நிலநடுக்கத்திற்கு எச்சரிக்கையாகவும் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. Lecturer Died in Accident: திடீரென குறுக்கே வந்த நபரால் கல்லூரி பேராசிரியருக்கு நடந்த சோகம்; சாலை விபத்தில் பரிதாப பலி.. பதறவைக்கும் காட்சிகள்.!