வானிலை: சென்னை உட்பட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உட்பட 12 இடங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மாலை 4 மணிவரையில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 17, நுங்கம்பாக்கம் (Chennai News Today): வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளும் பல இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (மே 16) மதியத்துக்கு மேலாகவும், இரவிலும் பல இடங்களில் திடீர் கனமழை பெய்தது. இந்நிலையில், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மற்றும் புதுச்சேரியில் மாலை 4 மணிவரை கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் திடீர் காற்று, இடி-மின்னலுடன் கனமழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 4 Year Old Boy Dies: 4 வயது சிறுவனின் அந்தரங்க உறுப்பில் காயம்.. ஆசிரியர்கள் தாக்கியதில் துடிதுடிக்க நேர்ந்த சோகம்.!
அடுத்த 3 மணிநேரத்துக்கு மழைக்கான வாய்ப்புள்ள இடங்கள்:
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)