PBKS Vs RR: ஏமாற்றத்துடன் வெளியேறிய வைபவ் சூர்யவன்ஷி.. அரைசதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ஹர்பிரீத்.!
இந்தியன் பிரீமியர் லீக் 2025 (Indian Premier League 2025) போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில், வைபவின் அரை சதம் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை உடனுக்குடன் லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் படியுங்கள்.
மே 18, ஜெய்பூர் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே நடக்கும் 58 வது லீக் போட்டித்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் muthalil பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்த பஞ்சாப் அணி அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தியது. ப்ரபிசிம்ரான் சிங் 10 பந்துகளில் 21 ரன்கள், நெஹல் 37 பந்துகளில் 70 ரன்கள், ஷ்ரேயஸ் ஐயர் 25 பந்துகளில் 30 ரன்கள் அடித்து அசத்தி இருந்தனர். RCB Vs KKR: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று மீண்டும் ஐ.பி.எல் போட்டிகள்.. பெங்களூர் - கொல்கத்தா அணிகள் மோதல்.!
வைபவ் சூர்யவன்ஷி வெளியேற்றம்:
அதனைத்தொடர்ந்து, 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் யஷஸ்வி 25 பந்துகளில் 50 ரன்கள், வைபவ் சூர்யவன்ஷி 15 பந்துகளில் 40 ரன்கள், சஞ்சு சாம்சன் 16 பந்துகளில் 20 ரன்கள் எடுத்துள்ளனர். இதில் சூர்யவன்ஷியின் அரைசதம் முயற்சிக்கு ஹர்பிரீத் பரார் தனது பந்துகளால் முற்றுப்புள்ளி வைத்தார். வைபவ் களமிறங்கியதும் 4 பவுண்டரி, 4 சிக்ஸர் வெளுத்து வாங்கினார்.
நெஹல் தனது இரண்டாவது அரை சதத்தை பதிவு செய்தார்:
திட்டமிட்டு செயல்பட்ட வீரர்கள்: