Vikravandi Accident: கார் - டூவீலர் மோதி பயங்கர விபத்து; 2 பேர் பலி., 3 பேர் படுகாயம்., டயர் வெடித்து சோகம்.!
காரின் டயர் வெடித்து நேர்ந்த விபத்தில், தறிகெட்டு இயங்கிய வாகனம் மோதி இருவர் பலியான சோகம் விக்ரவாண்டியில் நடந்தது.

நவம்பர் 11, விக்கிரவாண்டி (Viluppuram News): விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்ரவாண்டியில், விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி கார் ஒன்று பயணம் செய்தது. இந்த கார் விக்கிரவாண்டி, ராதாபுரம் பகுதியில் சென்றபோது, திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்து வாகனம் தறிகெட்டு இயங்கியது. Tirupathur Accident: வினையில் முடிந்த விளையாட்டு; கார் மோதி முதியவர் பரிதாப பலி., பதறவைக்கும் காட்சிகள்.!
2 பேர் பலி., 3 பேர் படுகாயம்:
இந்த சம்பவத்தில் கார் இருசக்கர வாகனம் மீது மோதி ஏற்பட்ட விபத்தில், அதில் பயணம் செய்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர்.
காவல்துறையினர் விசாரணை:
இவ்விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் விபத்து நேர்ந்ததும் அங்கிருந்து தப்பிசென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் காரை பறிமுதல் செய்த அதிகாரிகள், காரில் வந்த நபர்களுக்கு வலைவீசி இருக்கின்றனர்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)