Virudhunagar Accident: சாலையோர டீக்கடையில் ஜீப் புகுந்து 3 பேர் பலி., அரசுப்பேருந்தின் தறிகெட்டு 34 பேர் காயம்.. விருதுநகரில் நடந்த அடுத்தடுத்த துயரங்கள்.!
சாலையோர டீக்கடையில் டீகுடித்துக்கொண்டு இருந்தவர்கள் மீது ஜீப் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியான சோகம் விருதுநகரில் நடந்துள்ளது.
ஜூன் 10, விருதுநகர் (Virudhunagar News): விருதுநகர் மாவட்டத்தில் (Virudhunagar Car Accident) உள்ள திருச்சுழி, மண்டபசாலை பேருந்து நிறுத்தத்திற்கு அருகே தேநீர் கடை செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று பொதுமக்கள் தேநீர் குடித்துக்கொண்டு இருந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சாயல்குடியில் இருந்து மதுரை நோக்கி பயணம் செய்த ஜீப் ஒன்று, ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து சாலையோர தேநீர் கடையில் இருந்தவர்கள் மீது பாய்ந்து மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் அங்கு இருந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜீப் இறுதியாக மின்கம்பத்தில் மோதி நின்றது. அதிவேகத்தில் பயணம் செய்ததால், ஓட்டுனரால் வாகனத்தை துளியளவும் கட்டுப்படுத்த இயலாமல் நொடியில் பயங்கர விபத்து நடந்து முடிந்தது. Python Swallowed the Woman: காணாமல் போன மாயமான பெண்ணை விழுங்கிய மலைப்பாம்பு; வயிற்றைக்கிழித்து மனைவியின் உடலை மீட்ட கணவன்.!
3 பேர் பரிதாப பலி: விபத்து குறித்து தகவல் அறிந்த எம்.ரெட்டியபட்டி காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் செங்குளம் ஆட்டு வியாபாரி காளிமுத்து (54), விஜயராமன் (53), மூக்கையா (50) ஆகியோர் விபத்தில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. மத்தியில் ஆட்சிப்பொறுப்பேற்ற கட்சியை சேர்ந்த கொடி ஜீப்பில் பொருத்தப்பட்டு இருந்ததால், அதிகாரிகள் விபத்தை ஏற்படுத்திய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேறொரு விபத்து: அதேபோல, கோயம்புத்தூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி பயணம் செய்த அரசு பேருந்து, இன்று அதிகாலை விருதுநகர் (Virudhunagar Bus Accident) மாவட்டம் வச்சகாரப்பட்டி ஆர்.ஆர் நகர் பகுதியில் உள்ள பாலத்தில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. விபத்திற்குள்ளான பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததால், பேருந்தில் பணம் செய்த குழந்தைகள் 7 பேர் உட்பட 34 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 5 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள், தங்களின் சொந்த ஊரில் நடக்கும் திருவிழா உட்பட பிற நிகழ்ச்சிகளுக்கு வந்தபோது விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.
மேலும், தற்போது சிவகாசி, வடக்கு வீதி பகுதியில் செயல்பட்டு வரும் ஆடவருக்கான பிரத்தியேக ஜவுளிக்கடையில், தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)