College Girl Death: காதலருடன் சரக்கடித்துவிட்டு போதை காளான் சாப்பிட்ட மாணவி மர்ம மரணம்; கல்லூரி மாணவர் கைது..!
கல்லூரிக்கு சென்று படிக்கவேண்டிய வயதில் காதலில் விழுந்த இருவர், போதைக்கும் அடிமையாகி, அதீத போதைக்காக உயிர்கொல்லி போல செயல்படும் காளானை எடுத்துக்கொண்டதில் மாணவி மரணமடைந்த சோகம் பதறவைத்துள்ளது.
பிப்ரவரி 14 , ஊட்டி (Ooty News): போதைப்பழக்கம் இன்றளவில் ஆண்களை தாண்டி, இளம் தலைமுறையில் உள்ள பெண்களிடையேயும் அதிகரித்து வருகிறது. பாலின பேதமின்றி அறவே தவிர்க்கவேண்டிய மதுவை இருபாலரும் எடுத்துக்கொண்டு தங்களின் வாழ்க்கையை சீரழிப்பது மட்டுமின்றி, அதீத போதைக்காக ஆர்வக்கோளாறு போல செய்லபடுவதால் உயிரிழப்புகளும் நடக்கின்றன. அவ்வாறாக நடந்த சோகத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
காதல் ஜோடியாக கல்லூரி மாணவர்கள்: நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். இவர் அங்குள்ள பொறியியல் கல்லூரியில் மாணவராக பயின்று வந்துள்ளார். ஆகாஷும் - நர்சிங் கல்லூரியில் பயின்று வரும் மாணவி ஒருவரும் நட்பாக பழகி, பின்னாளில் காதல் வயப்பட்டதாக தெரியவருகிறது. காதல் ஜோடியான இருவரும் பல இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்து வந்துள்ளனர். Kanguva Update: வெளியீடுக்கு தயாராகும் சூர்யாவின் கங்குவா திரைப்படம்; இறுதிக்கட்ட படத்தொகுப்பு பணிகள் தீவிரம்..! அசத்தல் கிளிக் இதோ.!
மதுபோதையுடன் போதைக்காளான்: இந்நிலையில், சம்பவத்தன்று ஆகாஷ் தனது காதலியை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவரும் சேர்ந்து மதுபானம் அருந்தி இருக்கின்றனர். போதைக்காக ஆகாஷ் போதை காளானையும் (Pothai Kalan) வாங்கி வரவே, மதுபானம் அருந்திவிட்டு ஆகாஷின் காதலியான கல்லூரி மாணவி போதை காளானையும் (Drug Mushroom) உட்கொண்டுள்ளார். இதனால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
காதலர் கைது: இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்த போதை காளானை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஆகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே மாணவி உயிரிழந்ததிற்கான காரணம் தெரியவரும் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். Car Crash In Hospital: மருத்துவமனை வளாகத்தில் தறிகெட்டு இயங்கி விபத்திற்குள்ளான கார்; 10 பேர் படுகாயம்.!
குடும்பத்தினர் கதறல்: இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தங்களின் பிள்ளைகள் கல்லூரிக்கு சென்று படித்து எதிர்காலத்தில் நன்றாக வாழுவார்கள் என்று காத்திருந்த பெற்றோருக்கு தலையில் இடி இறங்கினார் போல மேற்கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறியது காண்போரை கண்கலங்கச்செய்தது.
காளான்களில் பல வகைகள் இருக்கின்றன. சந்தைகளில் விற்பனைக்கு வரும் காளான்களையே சரியான முறையில் சுத்தம் செய்து சமைக்காத பக்கத்தில் உடல் உபாதைகள் ஏற்படும். விற்பனைக்கு வராத விஷக்காளான்கள் மலைப்பகுதியில் நிறைந்து கிடக்கின்றன. கொடைக்கானல் மற்றும் ஊட்டி போன்ற சுற்றுலாத்தலங்களில் இவை பிரதானமாக விற்பனை செய்யப்படுவதாகவும் பல புகார்கள் எழுந்து இருக்கின்றன.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)