Husband Attacked Wife With Stone: இன்ஸ்டாகிராம் பழக்கம்; கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட மனைவியை குழவிக்கல்லால் தாக்கிய கணவர்..!
கன்னியாகுமரியில் கள்ளத்தொடர்பில் இருந்து வந்த மனைவியை அவருடைய கணவர் குழவிக்கல்லால் தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மே 14, கன்னியாகுமரி (kanyakumari News): கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த 47 வயது தொழிலாளியின் மனைவி இன்ஸ்டாகிராமை (Instagram) அதிக நேரம் பயன்படுத்தி வந்துள்ளார். இதனை வழக்கமாக கொண்டிருந்த அவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் மதுரையை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 2 Women Involved Fraud Case: ஆசை வார்த்தை கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்ட கும்பல்; 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது..!
இந்நிலையில், இவர் அடிக்கடி தனது உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு, அந்த இளைஞரை சந்திப்பதற்காக மதுரைக்கு சென்று வந்துள்ளார். மேலும், அவருடன் திருமணம் செய்துகொண்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவி வந்த நிலையில், இதனை பார்த்த அந்த இளம்பெண்ணின் கணவர் பெரும் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, மதுரைக்கு சென்ற அவர் ஒருவாரம் கழித்து, நேற்று முன்தினம் காலையில் வீட்டிற்கு வந்துள்ளார். உடனே அவரது கணவர் கள்ளக்காதல் விவகாரம் பற்றி கேள்வி கேட்க இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அவர், சிறிய குழவிக்கல்லால் மனைவியை பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவருக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர், இதுகுறித்து ஆரல்வாய்மொழி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)