Bangladesh Crisis: வங்கதேசத்தில் திடீர் ராணுவ ஆட்சி.. வன்முறைக்கான பின்னணி என்ன?!
வங்கதேசத்தில் இப்போது மிக மோசமான வன்முறை ஏற்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 06, டாக்கா (World News): வங்க தேசத்தில் சுதந்திரப் போரில் பங்கெடுத்த வீரர்களின் வம்சாவளிகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் வழங்கப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் சங்கத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் நாட்டின் உச்ச நீதிமன்றம், இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராகத் தீர்ப்பு அளித்தது. 30% ஆக இருந்த இருந்த சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகளுக்கான இடஒதுக்கீடு 5% ஆக குறைக்கப்பட்டது. தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால் போராட்டம் ஆனது கைவிடப்பட்டது. இருப்பினும் போராட்டத்தில் (Bangladesh Protest) பங்கேற்றவர்களை தீவிரவாதிகள் என பிரதமர் ஷேக் ஹசீனா கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
வங்கதேச வன்முறை: இதை அடுத்து வங்கதேச பிரதமர் ஹசீனா பதவி விலக வலியுறுத்தி மீண்டும் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்ட வன்முறையில் சிக்கி 14 காவலர்கள் உட்பட 100 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். வன்முறையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கலவரங்களுக்கு மத்தியில், ‘வங்கத் தந்தை’ என்று போற்றப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் (ஷேக் ஹசீனா தந்தை) சிலையை கலவரக்காரர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது பெரிதும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அந்நாட்டில் அனைத்து இணைய சேவைகளும் முடக்கி வைக்கப்பட்டன. Bangladesh Under Army Rule: இராணுவ ஆட்சியின் கீழ் வந்த வங்கதேசம்.. நாட்டை விட்டு வெளியேறிய பிரதமர் ஷேக் ஹசீனா..!
பிரதமர் ராஜினாமா: இந்த நிலையில் தான், நிலைமை கையை மீறிச் சென்ற நிலையில், அந்நாட்டு பிரதமர் சேக் ஹசீனா (Prime Minister Sheikh Hasina) தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். இதனை வங்கதேச ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜாமான் உறுதிப்படுத்தியுள்ளார். வங்கதேசத்தில் இந்தாண்டு தொடக்கத்தில் பொதுத் தேர்தல் நடந்தது. அதில் ஹசீனா வென்றதாக அறிவிக்கப்பட்ட போது, தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்று உலக நாடுகள் கூட குற்றஞ்சாட்டின.
ராணுவ ஆட்சி: மேலும் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டிலிருந்து தப்பிச் சென்ற நிலையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசை ராணுவம் அமைப்பதாக (Army Rule) அந்நாட்டு வங்கதேச ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜாமான் நாட்டு மக்களுக்கு இடையே உரையாற்றினார். குடியரசுத் தலைவர் முகமது சஹாபுதீனை சந்திக்கப் போவதாகவும், இன்றிரவுக்குள் தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஏற்கனவே பேசிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். எனினும் இந்த அரசின் வடிவம் என்னவாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)