Portable Suicide Pod: தற்கொலை செய்ய விருப்பமா?.. ஒரே பட்டனில் மரணம்.. விரைவில் அறிமுகமாகும் படுக்கை.!
இறக்க விரும்பினால் தற்கொலை செய்துகொள்ள, போர்ட்டபிள் தற்கொலை பாட்களை விரைவில் பயன்படுத்துவதாக சுவிட்சர்லாந்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 18, சூரிச் (World News): சுவிட்சர்லாந்து விரைவில் போர்ட்டபிள் தற்கொலை பாட்களை பயன்படுத்த உள்ளது. 2019-ஆம் ஆண்டில் முதன்முதலில் வெளியிடப்பட்ட ஸ்பேஸ் கிராஃப்ட் தோற்றமுடைய சர்கோ காப்ஸ்யூல் (Sarco Capsule), அதில் உள்ள ஆக்ஸிஜனை நைட்ரஜனுடன் மாற்றுகிறது, இது ஹைபோக்ஸியாவால் மரணத்தை ஏற்படுத்துகிறது. அதைப் பயன்படுத்த $ 20 (இந்திய மதிப்பில் ரூ. 1,671.53) செலவாகும் என கூறப்பட்டுள்ளது. லாஸ்ட் ரிசார்ட் அமைப்பு தெரிவிக்கையில், சுவிட்சர்லாந்தில் அதன் பயன்பாட்டிற்கு எந்த சட்டத்தடையும் இல்லை எனவும், அங்கு அந்த நபர் தாங்களாகவே விரும்பி தற்கொலை செய்துகொள்ள சட்ட ரீதியிலான தடைகள் ஏதும் இல்லை எனவும் கூறுகின்றது.
தி லாஸ்ட் ரிசார்ட்டின் தலைமை நிர்வாகி ஃப்ளோரியன் வில்லட் கூறுகையில், இறக்க விரும்பும் நபர் முதலில் அவர்களின் மனதிறன் பற்றிய மனநல மதிப்பீட்டில் தேர்ச்சி பெற வேண்டும். பின்பு, அந்த நபர் ஊதா நிற காப்ஸ்யூலில் ஏறி, மூடியை மூடிவிட்டு, அவர்கள் யார், அவர்கள் எங்கே இருக்கிறார்கள், பட்டனை அழுத்தினால் என்ன நடக்கிறது என்பது போன்ற தானியங்கு கேள்விகள் கேட்கப்படும் என்றார். மேலும், 'நீங்கள் இறக்க விரும்பினால், குரல் செயலியில், இந்த பொத்தானை அழுத்தவும் (Press Button to Die) என்று சர்கோ கண்டுபிடிப்பாளர் பிலிப் நிட்ச்கே கூறினார். Car Accident: கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி விபத்து; கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி..!
சர்கோ காப்ஸ்யூல் பயன்படும் முறை:
இதுகுறித்து விவரிக்கையில், 'ஒருமுறை பட்டனை அழுத்தினால், காற்றில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு 30 வினாடிகளுக்குள் 21 சதவீதத்திலிருந்து 0.05 சதவீதமாகக் குறைகிறது என்றார். அந்த குறைந்த அளவிலான ஆக்ஸிஜனின் காற்றின் இரண்டு சுவாசங்களுக்குள், அவர்கள் சுயநினைவை இழப்பதற்கு முன்பு திசைதிருப்பப்பட்ட, சற்று மகிழ்ச்சியாக அவர்கள் உணரத் தொடங்குவார்கள் என்றும், மரணம் நிகழும் சுமார் 5 நிமிடங்களுக்கு முன்னர் அவர்கள் சுயநினைவற்ற நிலையில் இருப்பார்கள் என்றும்' அவர் தெரிவித்துள்ளார்.
காப்ஸ்யூலில் உள்ள ஆக்ஸிஜன் அளவு, ஒரு நபரின் இதயத் துடிப்பு மற்றும் இரத்தத்தின் ஆக்ஸிஜன் செறிவு ஆகியவற்றை சர்கோ கண்காணிக்கிறது. அந்த நபர் எப்போது இறந்தார் என்பதை அதில் பார்க்க முடியும். மேலும், ஒருமுறை அந்த பொத்தானை அழுத்தினால், திரும்பிச் செல்ல வழி இல்லை. இதில் குறைந்தபட்ச வயது வரம்பு 50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இருப்பினும், 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தால், அவர்களது வயதின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட நபரை விருப்பத்தின் பேரில் அனுமதிக்கப்படுவர்.
சர்கோ காப்ஸ்யூல் வடிவமைப்பு:
சர்கோ 5 அடி மற்றும் 8 அங்குலங்கள் (1.73 மீட்டர்) உயரமுள்ள ஒருவருக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இதனைத்தொடர்ந்து இரட்டை சர்கோவை உருவாக்குவதினால், தம்பதிகள் தங்கள் வாழ்க்கையை ஒன்றாக முடிக்க முடியும். எதிர்கால சர்கோஸின் விலை சுமார் 15,000 யூரோக்கள் ஆகும். மரண தண்டனையில் பயன்படுத்த சர்கோ ஒருபோதும் அனுமதிக்கப்படாது என்று தி லாஸ்ட் ரிசார்ட் தெரிவித்துள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)