Mother Sold Her 4 Month Old Baby: 4 மாத பெண் குழந்தையை விற்ற கொடூர தாய்; மது குடிக்க பணம் வேண்டி 100 ரூபாய்க்கு விற்பனை..!

மதுகுடிக்க பணம் இல்லாத காரணத்தினால் தனது 4 மாத குழந்தையை அவரது தாயார் பணத்திற்கு விற்றுள்ள சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

Rs.100 Rupees | Child Baby File pic (Photo Credit: Pixabay)

மே 06, கொப்பல் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள கொப்பல் தாலுகா, உலிகி கிராமத்தில் 25 வயது பெண் ஒருவர் பிச்சை எடுத்து வந்துள்ளார். இவர் அங்குள்ள உள்ள சாலையோர பகுதிகளிலும் மற்றும் மண்டபங்களில் தங்கி வந்தார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். Minor Girl Injured After Bitten By Pet Dog: வளர்ப்பு நாய் கடித்து 5 வயது சிறுமி படுகாயம்; மருத்துவ செலவை அதன் உரிமையாளர் ஏற்றுக்கொள்வதாக வாக்குறுதி..!

இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் இவரிடம் ஒரு குழந்தையை விலைக்கு வாங்கி உள்ளது, அங்குள்ள அங்கன்வாடி ஊழியர்களுக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து, அந்த பெண்ணிடம் அவர்கள் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இதனையடுத்து, அந்த குழந்தையை மீட்டு மாவட்ட குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும், விசாரித்ததில் அந்த பெண்ணுக்கு மது அருந்தும் பழக்கம் (Alcohol Drinking Habit) இருந்துள்ளது. இதனால் அவருக்கு மூன்றாவதாக பிறந்துள்ள 4 மாதங்களே ஆன பெண் குழந்தையை, அப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ரூ.100-க்கு விற்பனை செய்துள்ளார்.

மது அருந்த பணம் இல்லாத நிலையில் இவ்வாறு செய்துள்ளது தெரியவந்தது. மேலும், அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டு, எந்த ஊர் என்னவென்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து, காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement