Businessman Son Killed: ரூ.50 இலட்சம் பணத்திற்காக கடத்தப்பட்ட தொழிலதிபர் மகன் படுகொலை; 8 பேர் கொண்ட கடத்தல் கும்பலை சுட்டுப்பிடித்த காவல்துறை.!

அவுரையா மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் ரூ.50 இலட்சம் பணத்திற்காக கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பயங்கரம் நடந்துள்ளது. சிறுவனை பையில் அடைத்து வைத்ததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Encounter in Auraiya Child Kidnap & Murder Case 27-March-2024 (Photo Credit: @SachinGuptaUP X)

மார்ச் 27, அவுரியா (Uttar Pradesh News): உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அவுரியா (Auraiya Business Man Son Kidnapped) மாவட்டத்தைச் சார்ந்தவர் ஷாகில். இவர் தொழிலதிபராக இருந்து வருகிறார். ஷாகிலுக்கு பதினோரு வயதுடைய மகன் ஒருவர் இருக்கிறார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிற்று வருகிறார். சம்பவத்தன்று (மார்ச் 23) அகில் திடீரென மாயமாகி இருக்கிறார். அவரைத் தேடி அலைந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், சிறுவன் கிடைக்காத காரணத்தால் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். Aranmanai 4 Update: அப்படிப்போடு.. திகில் காட்சிகளுடன் சிரித்து மகிழ தயாரா?.. அரண்மனை 4 வெளியீடு தேதி அறிவிப்பு.! 

ரூ.50 இலட்சம் பணத்திற்காக கடத்தி கொடூரம்: இதனிடையே, சிறுவனை கடத்தி வைத்துள்ளதாக கும்பல் ஒன்று ஷாகிலுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளது. மேலும், குழந்தையை விடுவிக்க வேண்டுமென்றால் ரூபாய் 50 லட்சம் பணம் கொடுக்கப்பட வேண்டும் என்று பேரமும் பேசப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கவே, அதிகாரிகள் கும்பலை தேடி தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், சிறுவன் டெல்லிக்கு கடத்திச் செல்லப்பட்டது உறுதியானது. இதனால் அதிகாரிகள் டெல்லிக்கு சென்று முகாமிட்டனர். சிறுவன் கடத்தி வைக்கப்பட்ட இடத்திற்கு அதிகாரிகள் சென்றபோது, சிறுவனின் சடலம் மட்டுமே மீட்கப்பட்டது. சிறுவனை கடத்தியவர்கள் பையில் வைத்து அடைத்த காரணத்தால், சிறுவன் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. Lava O2 Smartphone: பட்ஜெட் பிரியர்களுக்கு ஏற்ற, லாவாவின் ஓ2 ஸ்மார்ட்போன்; சிறப்பம்சங்கள், விலை நிலவரம் என்ன?..! விபரம் இதோ.! 

குற்றவாளிகள் சுட்டுப்பிடிப்பு: இதனையடுத்து, நடந்த விசாரணையின் பேரில் குற்றவாளிகளான அவதேஷ் மிஸ்ரா, தீபக் குப்தா, ஜதின் திவாகர், பிரவீன் நிஹால், ரியாஸ் சித்திக், ஆஷிஷ், அங்கித், சோபன் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், இவர்கள் அனைவரும் காவல் துறையினரை தாக்கி தப்பிச் செல்ல முயன்ற காரணத்தால், காலுக்கு கீழ் துப்பாக்கியால் சுடப்பட்டு பிடிக்கப்பட்டனர்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement