Nagpur Mumbai Road Accident: கார் - டிரக் மோதி பயங்கர விபத்து: அப்பளம் போல நொறுங்கிய கார்., 6 பேர் பரிதாப பலி.!
சாலைகளில் வாகனங்களில் செல்லும்போது, ஒவ்வொரு ஓட்டுனரும் பொறுப்புணர்வுடன் செயல்படுவதே விபத்துகளை தவிர்க்க வழிவகை செய்யும்.
டிசம்பர் 16, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் மாவட்டம், காடோல், தொன்கஹம் கிராமத்தில் வசித்து நபர்கள் தங்களின் காரில் நாக்பூர் - மும்பை (Mumbai Samriddhi Expressway Accident) தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்துகொண்டு இருந்தனர்.
லாரி - கார் மோதி விபத்து: அச்சமயம், அவ்வழியே வந்த லாரி ஒன்று, கிராமத்தினர் பயணித்த ஸ்கார்பியோ கார் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே 6 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். Believes Power of Love: "அன்பு, கடவுள், நன்மையின் சக்தியை நம்புங்கள்" - ரசிகர்களுக்கு நடிகை நயன்தாரா அறிவுரை.!
நள்ளிரவில் சோகம்: நள்ளிரவு 01:30 மணியளவில் நடந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் பலியானோரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
மீட்புப்பணி & விசாரணை: இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் யார்? என்ற விபரம் சேகரித்து வரும் காவல் துறையினர், சம்பவம் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் மும்பை - நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்துகளால் 143 பேர் பலியானதாகவும் அறிவிக்கைகள் தெரிவிக்கின்றன.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)