Heart Chilling Horror: பெண்ணுறுப்பில் கைவிட்டு பாலியல் தொழிலாளி கொடூர கொலை; ஆண்மையற்ற இளைஞனின் அதிர்ச்சி செயல்.!
26 வயது இளம்பெண் பாலியல் தொழிலாளியாக வாடிக்கையாளரிடம் சென்ற நிலையில், ஆண்மையற்ற நபர் ஒருகட்டத்தில் சைக்கோ போல நடந்துகொண்டு பெண்ணின் பெண்ணுறுப்பில் கையை விட்டுள்ளார். இதனால் அதிக உதிரப்போக்கு ஏற்பட்ட பெண்மணி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏப்ரல் 16, போபால் (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால், பாவாடியா கலான் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 10ம் தேதி ரிதுல் பாண்டே என்பவர் அறையெடுத்து இங்கு தங்கி இருந்துள்ளார். சில நாட்கள் அவருடன் ரிதுலின் தந்தையும் இருந்துள்ளார். ஏப்ரல் 13ம் தேதி மாலை ரிதுலுக்கு பாலியல் தொழிலாளியுடன் தனிமையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.
பாலியல் தொழிலாளியாக 26 வயது இளம்பெண்: இதனையடுத்து, விடுதியில் ஊழியராக வேலைபார்த்து வரும் சாகர் என்பவர், தனக்கு தெரிந்த பாலியல் தொழில் புரோக்கரான வயதான தம்பதி உதவியுடன் 26 வயது இளம்பெண்ணை விடுதிக்கு அனுப்பி வைத்துள்ளனர். 26 வயது இளம்பெயின் ஹரியானா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் எனினும், சிறுவயதில் இருந்து போபாலில் தங்கி இருந்துள்ளார். Bharat Pe Appoints Nalin Negi As CEO: பேடிஎம், போன்பே வரிசையில் மாஸ் கட்டிய பாரத் பே: தலைமை நிர்வாக அதிகாரியாக நளின் நேகி நியமனம்..!
ஆண்மை இல்லாத இளைஞர்: இந்நிலையில், 26 வயதுடைய பாலியல் தொழிலாளி, ரிதுலின் அறைக்கு சென்று உல்லாசமாக இருக்க முயன்றுள்ளனர். ரிதுலுக்கு ஆண்மை இல்லை என்பதால், அவரால் பாலியல் தொழிலாளியுடன் உணர்வுபூர்வமாக இணைய முடியவில்லை. இது பாலியல் தொழிலாளிக்கு வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் அங்கிருந்து கிளம்பி செல்ல முற்பட்டுள்ளார்.
வற்புறுத்தல் வாக்குவததால் நடந்த பெரும் கொடூரம்: ஆனால், பாலியல் தொழிலாளியை அனுப்ப விருப்பம் இல்லாத ரிதுல், தன்னுடன் நேரத்தை செலவிட வற்புறுத்தியுள்ளார். அச்சமயம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தின் உச்சத்திற்குச்சென்ற ரிதுல், பெண் பாலியல் தொழிலாளியின் அந்தரங்க உறுப்பில் கையை விட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட அதிக உதிரப்போக்கால் பெண் மயங்கி சரிந்தார். Bus Fall off from NH Bridge: பாலத்தில் இருந்து கீழே விழுந்த பேருந்து: மதுபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனரால் 5 பயணிகள் பலி., 38 பேர் படுகாயம்..!
அதிர்ச்சி தகவல் அம்பலம்: அவரை அப்படியே விட்டுவிட்ட ரிதுல், நிகழ்விடத்தில் இருந்து தப்பிச்சென்றார். பின் பெண்ணின் சடலம் ஏப்ரல் 14ம் தேதி காவல் துறையினரால் மீட்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பாலியல் தொழிலாளிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் தெரியவந்தது. விசாரணையை தொடர்ந்து பாலியல் தொழிலாளியை கொலை செய்த ரிதுல், ரிதுலுக்கு பெண்ணை ஏற்பாடு செய்து கொடுத்த சாகர், அவர் தொடர்பு கொண்டு பேசிய பாலியல் புரோக்கர்கள் ஆகியோர்கள் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் ரிதுல் தின்னர் குடித்து தற்கொலைக்கு முயன்றதால், மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)