காதலி IPS ஆக வேண்டி 220 கிமீ பாதயாத்திரை சென்ற காதலன்.. நெகிழ்ச்சி சம்பவம்.!
டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலியின் IPS கனவு நிறைவேற சுமார் 220 கிலோமீட்டர் பாதயாத்திரை பயணமாக சிவன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
ஜூலை 11, டெல்லி (Delhi News): டெல்லியில் வசித்து வருபவர் ராகுல். இவருக்கு இளம்பெண் ஒருவருடன் ஏற்பட்ட பழக்கமானது காதலாக மாறியிருக்கிறது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்த நிலையில், ராகுலின் காதலி ஐபிஎஸ் தேர்வுக்கு பயின்று வருவதாக தெரிய வருகிறது. இதனால் தனது காதலி எப்படியாவது ஐபிஎஸ் (IPS) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என விரும்பிய ராகுல் காதலிக்காக இறை வழிபாடுகளை தீவிரப்படுத்தி இருக்கிறார். அதாவது சுமார் 220 கிலோமீட்டர் பாதயாத்திரை பயணமாக சிவன் கோவிலுக்கு சென்று 121 லிட்டர் கங்கை நதிநீரை கொண்டு அபிஷேகம் செய்வதாக வேண்டுதல் செய்து தற்போது அதை செயல்படுத்தி இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி இளைஞரின் மீது கவனம் திரும்பியுள்ளது. Trending Video: டாஸ்மாக்கில் அர்ச்சகரை வைத்து பூஜை செய்த தமிழக அரசு?.. வைரலாகும் வீடியோ.!
காதலி IPS ஆக 220 கிலோமீட்டர் பாதயாத்திரை பயணம் செய்த காதலன் :
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)