Voting Awareness: தேர்தல் எதிரொலி... 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி..!

ஜனநாயகத்தின் கடமையான வாக்களிக்கும் உரிமையை அறிவுறுத்தும் வகையில் பொதுமக்களிடையே 100 சதவீத வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 05, காஞ்சிபுரம் (Kancheepuram): 2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் (Lok Sabha election) ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள, சுங்குவார்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நாடாளுமன்ற பொது தேர்தலையொட்டி 100% வாக்களிப்பதை வலியுறுத்தி (100% voting) பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அவர்கள் தொடங்கி வைத்தார். அப்போது அவர் உடன் வருவாய் கோட்டாட்சியர் சரவணன் கண்ணன், அரசு அலுவலர்கள் ஏராளமானோர் இருந்தனர். TN Weather Report: கடலோர மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement