Pappammal: இயற்கை விவசாயி மூதாட்டி பாப்பம்மாள் மறைவு; தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி இரங்கல்.!

இயற்கை விவசாயத்தில் உண்மையான சான்றோராகவும், சம்பியனாகவும் விளங்கிய பாப்பம்மாளின் மறைவு வருத்தத்தை தருவதாக ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.

Organic Farmer Pappammal (Photo Credit: @rajbhavan_tn X)

செப்டம்பர் 29, சென்னை (Chennai News): பத்மஸ்ரீ விருதுபெற்ற இயற்கை விவசாயி மூதாட்டி பாப்பம்மாள் (vythu 105), வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு இயற்கை எய்தினார். அவர் இயற்கை விவசாயத்திற்காக தனது வாழ்நாட்களை அர்ப்பணித்து வாழ்ந்து வந்த நிலையில், அவரின் சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் கௌரவப்படுத்தி இருக்கின்றன. இதனிடையே, அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, தனது எக்ஸ் வலைப்பக்கத்தில், "விவசாயத்துறையில் ஒரு உண்மையான ஆன்றோராகவும் இயற்கை விவசாயத்தின் சாம்பியனாகவும் விளங்கிய பத்மஸ்ரீ விருது பெற்ற திருமதி. பாப்பம்மாள் அவர்களின் மறைவால் ஆழ்ந்த வருத்தமுற்றேன். அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகள், நீடித்த விவசாயத்தின் ஆணிவேரளவில் அழியாத அடையாளத்தை விட்டுள்ளன. பணிவான பண்புக்காகவும் கனிவோடு பழகும் குணத்துக்காகவும் போற்றப்படும் அவர், எண்ணற்ற மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!" என கூறியுள்ளார். Udhayanidhi Stalin: "உதயநிதி ஸ்டாலின் எனும் நான்" துணை முதல்வராக பொறுப்பேற்கிறார் உதயநிதி; கொண்டாட்டத்தில் திமுக தொண்டர்கள்.! 

ஆளுநர் ஆர்.என் ரவி இரங்கல் குறிப்பு: 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சமூக ஊடகம் உங்களுக்கு வழங்குகிறது. மேலே உள்ள இடுகை பயனரின் சமூக ஊடகக் கணக்கிலிருந்து நேரடியாக உட்பொதிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளடக்கம் திருத்தப்படவில்லை அல்லது இல்லாமல் இருக்கலாம் சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் சமீபத்திய ஊழியர்களால் திருத்தப்பட்டது (மற்றும் உண்மைகள் சமீபத்திய கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும் சமீபத்தில் அதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement