Van Accident: கோவிலுக்கு சென்ற பக்தர்களின் வேன் விபத்து; 8 மாத குழந்தை பலி.. 20 பேர் படுகாயம்..!

திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரி கோவிலுக்கு சென்ற பக்தர்களின் வேன் பின்பக்கம் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில், 8 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Road Accident (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 26, ஆரணி (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே துந்தரீகம்பட்டு கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மாதம் ஒருமுறை புதுச்சேரியில் (Puducherry) உள்ள பிரித்திரிங்க தேவியம்மன் கோவிலுக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 26) ஆரணி டவுன் அருணகிரிசத்திரம் பகுதியிலிருந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் புதுச்சேரி பிரித்திரிங்க தேவியம்மன் கோவிலுக்கு டூரிஸ்ட் வேனில் (Tourist Van) சென்றுள்ளனர். அருணகிரிசத்திரம் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் முரளி வேனை ஓட்டியுள்ளார். Fancy Store Fire Accident: பேன்சி ஸ்டோரில் தீ விபத்து.. வேளச்சேரியில் பரபரப்பு சம்பவம்..!

இந்நிலையில், ஆரணி அடுத்த விண்ணமங்கலம் சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது, திடீரென வேனின் பின் பக்கம் டயர் வெடித்து (Tire Burst) விபத்து ஏற்பட்டது. இதில், பயணம் செய்த அருணகிரிசத்திரம் பகுதியை சேர்ந்த நடராஜன்-அமுதவள்ளி தம்பதியினரின் 8 மாத குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இதனையடுத்து, படுகாயமடைந்த 20 பேரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அவசர ஊர்தி மூலம் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இதில், 5 வயது சிறுவனை மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement