Girl Dies by Electrocution: மின்சாரம் தாக்கி 5 வயது சிறுமி மரணம்; வீட்டு வாசலில் நடந்த துயரம்.. பெற்றோர்களே கவனம்.!
மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக, மின்கசிவு குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், 5 வயது சிறுமியின் உயிர் பறிபோனது.

அக்டோபர் 01, சாத்தூர் (Virudhunagar News): விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், இருக்கன்குடி கிராமத்தில் வசித்து வருபவர் மணி என்ற கார்த்திக். இவரின் ஐந்து வயது மகள் சம்யுக்தா. சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது, அங்கு மின்கம்பத்தை பிடித்து விளையாடியதாக தெரியவருகிறது. Chennai Airport: சென்னை விமான நிலையம் செல்வோர் கவனத்திற்கு.. மறந்தும் தாமதமாக போயிடாதீங்க.!
சம்பவ இடத்திலேயே மரணம்:
இதனிடையே, திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சிறுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவரை விரைந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றபோது, மருத்துவர்களும் சிறுமியின் மரணத்தை உறுதி செய்ததால், சம்யுக்தவின் பெற்றோர்-உறவினர்கள் கண்ணீர் சோகத்திற்கு உள்ளாகினர். Pudukkottai Shocker: சிறுமியை கிண்டல் செய்த நபரை தட்டிக்கேட்ட தந்தை குத்திக்கொலை; புதுக்கோட்டையில் பயங்கரம்.!
மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியம்:
மேலும், மின்வாரிய அதிகாரிகளின் மின்கசிவு குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தாலேயே சிறுமியின் மரணம் ஏற்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் குற்றசாட்டை முன்வைக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
புகார் அளித்தும் பலனில்லை:
கடந்த சில நாட்களாகவே இருக்கன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில், ஈரப்பத தன்மை காரணமாக மின்சாரம் மின்கம்பத்தில் கசிந்துள்ளது. ஏற்கனவே இந்த விஷயத்தால் பாதிக்கப்பட்டு உயிர் தப்பியவர்கள், மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனிடையே தான் சிறுமியின் மரணம் நடந்துள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)