சுதந்திர தின ஸ்பெஷல்.. 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

79வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றி சிறப்புரை (Independence Day 2025) ஆற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் 9 முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

CM Stalin Independence Day Speech (Photo Credit : Youtube)

ஆகஸ்ட் 15, சென்னை (Chennai News): சென்னை தலைமைச்செயலகமான புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 79வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார். அப்போது 9 முக்கிய அறிவிப்புகளையும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் (CM Stalin Speech) சுதந்திர தின அறிவிப்புகளாக வெளியிட்டு இருந்தார். அதன் விபரங்கள் பின்வருமாறு காணலாம். Breaking: தூய்மை பணியாளர்களுக்கு 6 சிறப்புத் திட்டங்கள்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு.! 

சுதந்திர தினத்தை முன்னிட்டு 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் :

  • மாநில அரசு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் தொகை ரூ.22,000 ஆக உயர்த்தப்படும்.
  • மாநில விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் ரூ.12,000 ஆக உயர்த்தப்படும்.
  • வீரபாண்டிய கட்டபொம்மன் வழித்தோன்றல்கள், முன்னாள் ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள், சிவகங்கை மருது சகோதரர்களின் வழித்தோன்றல்கள், வ.உ.சிதம்பரனாரின் வழித்தோன்றார்கள் தற்போது பெற்று வரும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதிய தொகை ரூ.11,000 ஆக உயர்த்தப்படும்.
  • இரண்டாவது உலகப் போரில் பங்கேற்று இருந்த தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களுக்கு ஆயுட்கால மாதாந்திர நிதி உதவி தொகை ரூ.15,000 ஆக உயர்த்தப்படும்.
  • இரண்டாம் உலகப்போரில் பங்கேற்றதால் கணவரை இழந்த கைம்பெண்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால மாதாந்திர நிதி உதவி தொகை ரூ.8,000 ஆக்க உயர்த்தப்படும்.
  • தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் வசதிக்கு சென்னை மாதவரம் பகுதியில் ரூ.22 கோடி செலவில் தங்கும் விடுதி கட்டிடம் அமைக்கப்படும்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு மலைப்பகுதிகளிலும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
  • மாநில அளவில் ஓட்டுநர் பயிற்சி பெறுவதற்கு மையம் அமைக்கப்பட்டு ஓட்டுநர் பயிற்சி மையம் விரிவாக்கம் செய்யப்படும். மண்டல அளவில் இரண்டு பயிற்சி மையங்கள், மாவட்டத்திற்கு ஒரு பயிற்சி பள்ளி புதிதாக தொடங்கப்படும்.
  • பத்தாயிரம் மாணவர்களுக்கு ரூ.15 கோடி செலவில் இணைய வழி கற்றல் திறன் மேம்பாடு நவீன பயிற்சிகள் வழங்கப்படும்.

தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின் :

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement