Three People Die by Suicide: கடன் தொல்லையால் குடும்ப தகராறு; 2 மகள்களுக்கு விஷம் கொடுத்து கொலை.. தாய் தூக்குப்போட்டு தற்கொலை..!
ஈரோட்டில் அதிக கடன் தொல்லையால் தனது 2 மகள்களை கொன்றுவிட்டு, தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 20, ஈரோடு (Erode News): ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் பச்சையம்மன் கோவில் தெரு ராயல் லே-அவுட் பகுதியை சேர்ந்த தம்பதி ஜாகீர் உசேன் (வயது 46)-ஹசீனா (வயது 39). இத்தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள மாநகராட்சி மகளிர் மேல்நிலை பள்ளியில், மூத்த மகள் ஆயிஷா பாத்திமா (வயது 16) 11-ஆம் வகுப்பும், ஜனா பாத்திமா (வயது 13) எட்டாம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்நிலையில், ஜாகீர் உசேன் காலையில் காய்கறி வியாபாரமும், மற்ற நேரங்களில் ஓட்டல் மற்றும் பேக்கரியில் உணவு பொருட்கள் செய்துகொடுக்கும் வேலையும் செய்து வந்துள்ளார். இவர் சொந்த தொழில் தொடங்குவதற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். அவரது மனைவியும் மகளிர் சுய உதவிக்குழுக்களில் கடன் வாங்கி, இந்த கடனை அவர்கள் திரும்ப செலுத்த முடியாததால், இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து, நேற்று காலையில் கணவன்-மனைவி இடையே மீண்டும் கடன் பிரச்சனை (Debt Problem) தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. Merchant Dies By Suicide: ஆன்லைன் வர்த்தகத்தில் பணமிழப்பு; மளிகை கடைக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை..!
இதன்காரணமாக மகள்கள் இருவரும் பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளனர். இதனையடுத்து, மிகவும் மனமுடைந்து காணப்பட்ட ஹசீனா நேற்று மாலை தனது மகள்கள் இருவருக்கும் விஷம் (Poison Death) கொடுத்து கொன்றுவிட்டு, பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டுள்ளார். இதனிடையே ஜாகீர் உசேன் தனது மனைவியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளது. அவர் எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவர் வீட்டின் உரிமையாளரை தொடர்பு கொண்டு பார்க்க சொல்லியுள்ளார். அவர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது, இரு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளியபடி கிடந்துள்ளனர். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டுள்ளார். அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தப் போது, அவர்கள் 3 பேர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கருங்கல்பாளையம் காவல்துறையினர் 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)