Summer Weather Report (Photo Credit: Team LatestLY)

பிப்ரவரி 20, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ வறண்ட வானிலை நிலவியது. தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அதிகபட்ச வெப்பநிலையில்‌ பெரிய மாற்றம்‌ ஏதுமில்லை. கடந்த 24 மணி நேரத்தில்‌ மழை ஏதும் பதிவாகவில்லை. அதிகபட்சமாக கரூர்‌ பரமத்தியில் 36.5 டிகிரி செல்சியஸ்‌ வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ்‌ அதிகமாக பதிவாகியுள்ளது. ஏனைய இடங்களில்‌ பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. தமிழக உள்‌ மாவட்டங்களின்‌ சமவெளி பகுதிகளில்‌ 32- 37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ தமிழக கடலோரப்பகுதிகள்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ 30 - 36 டிகிரி செல்சியஸ்‌ பதிவாகியுள்ளது. வானிலை: தமிழகத்தில் வெப்பநிலை குறித்த அப்டேட்.. இன்றைய வானிலை, நாளைய வானிலை நிலவரம் என்ன? விபரம் உள்ளே..!

இன்றைய வானிலை & நாளைய வானிலை (Today Weather & Tomorrow Weather):

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையில், 20-02-2025 மற்றும்‌ 21-02-2025 வரையில் தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்‌. ஓரிரு இடங்களில்‌ அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 - 3 செல்சியஸ்‌ அதிகமாக இருக்கக்கூடும்‌. காலை வேளையில்‌ பொதுவாக லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. 22-02-2025 முதல்‌ 26-02-2025 வரையில் தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்‌. ஒரு சில இடங்களில்‌ அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ்‌ அதிகமாக இருக்கக்கூடும்‌.

சென்னை வானிலை நிலவரம் (Chennai Weather Update):

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று (20-02-2025) வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. காலை வேளையில்‌ பொதுவாக லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌. நாளை (21-02-2025) வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. காலை வேளையில்‌ பொதுவாக லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌.