World Contraception Day (Photo Credit: LatestLY)

செப்டம்பர் 26, புதுடெல்லி (Special Day): கருத்தடை முறைகள் பற்றி மக்கள் அறியாத காலம் ஒன்று இருந்தது. இதன் விளைவாக, பல தம்பதிகளுக்கு அதிக குழந்தைகள் உள்ளனர். குடும்பக் கட்டுப்பாடு என்ற பெயரில் அரசும், மருத்துவர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கினார்கள். ஆனாலும் பலருக்கும் இது குறித்த தெளிவு இல்லை. 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி பத்து சர்வதேச குடும்பக் கட்டுப்பாடு அமைப்புகளால் கருத்தடை பற்றிய விழிப்புணர்வைப் பரப்ப முதன்முதலில் உலக கருத்தடை தினம் (World Contraception Day) கடைப்பிடிக்கப்பட்டது.

கருத்தடை: தேசிய சுகாதார புள்ளிவிவரத்தின்படி, தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 65,000 கருக்கலைப்புகள் நடக்கின்றன. இது, பதிவு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கருக்கலைப்பின் எண்ணிக்கை மட்டுமே. பதிவு செய்யாமல், பாதுகாப்பற்ற முறையில் செய்துகொள்ளப்படும் கருக்கலைப்புகளின் எண்ணிக்கை இதைவிடப் பன்மடங்கு அதிகம். திட்டமிடப்படாத கரு உருவாதலை தவிர்த்தாலே, கருக்கலைப்புகளைத் தவிர்த்துவிடலாம். தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்க கருத்தடை சாதனங்கள், பிறப்பு கட்டுப்பாடு சாதனங்கள், காண்டம் அல்லது வேறு சில சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இனி குழந்தையே வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு, நிரந்தர கருத்தடை சிகிச்சை ஸ்டெரிலைசேஷன் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Navagraha Temple Tour: குறைந்த செலவில் நவக்கிரகங்கள் ஆன்மீக சுற்றுலா.. வாங்க போகலாம்.!

கருத்தடை சாதனங்கள்:

ஆணுறைகள்: விந்தணுக்கள் கருப்பைக்குள் நுழைவதை உடல் ரீதியாக தடுப்பதன் மூலம் கர்ப்பத்தை தடுக்க முயற்சிக்கும். அவற்றில் ஆண் ஆணுறைகள் மற்றும் விந்தணுக் கொல்லி கொண்ட பெண் ஆணுறைகள் ஆகியவை அடங்கும்.

​கருத்தடை மாத்திரை: பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் 99% கர்ப்பத்தை தடுக்கின்றன. இதை தினமும் எடுத்துகொள்ள வேண்டும். ஆணுறை போன்ற பிற பிறப்பு கட்டுப்பாடுகளை போலல்ல.

காப்பர் டி: இன்ட்ராயூரெத்ரல் சாதனங்கள் (IUDs) ‘T’ வடிவத்தில் இருக்கும். இவை கருப்பையில் உள்ளே செருகப்படுகின்றன. அவை நீண்டகாலமாக செயல்படக்கூடிய கருத்தடையின் மிகவும் பயனுள்ள வடிவங்களில் ஒன்றாகும். இந்த சாதனம் அகற்றப்பட்ட உடனேயே கருவுறும் தன்மை இயல்பு நிலைக்குத் திரும்பும்.

எல்லோருக்கும் எல்லாக் கருத்தடை முறைகளும் பொருந்திவிடாது. உதாரணமாக, சிலருக்கு காப்பர் டியை உடல் ஏற்றுக்கொள்ளும், மாத்திரைகளை ஏற்றுக்கொள்ளாது. சிலருக்கு இவை இரண்டும் இல்லாமல் வேறேதேனும் கருத்தடை சாதனம்தான் பொருந்தும். ஆக, கருத்தடை சாதனத்தைப் பயன்படுத்துவதற்கு முன் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது கட்டாயம்.