ஆகஸ்ட் 22, சென்னை (Trending Video): வயல்வெளியில் வந்த ஆபத்தான பாம்பை ஒரு சிறுவன், வெறும் கையால் பிடிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ (Snake Video) ஒன்று, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சியடைந்து தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஒருவர், 'இது குழந்தைக்கு மிகவும் ஆபத்தானது' என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், 'இது வயல்வெளிகளில் காணப்படும் எலியை பிடித்து சாப்பிடும் பாம்பு என்றும், இதனால் வயலில் உள்ள பயிர்களை பாதுகாப்பதால் இது விவசாயிகளுக்கு நன்மை பயக்கும்' என்றும் பதிவிட்டுள்ளார். இருப்பினும், இது மிகவும் ஆபத்தான செயல். ஒரு சிறு குழந்தை பாம்பை வெறுங்கையால் பிடிப்பது ஆபத்தை விளைவிக்கும். தற்போது, இதன் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. கணவர் கழுத்து நெரித்து கொடூரக் கொலை.. மனைவி, மகள் கைது..!

வீடியோ இதோ:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)