ஏப்ரல் 16, சென்னை (Chennai News): சென்னையின் பல பகுதிகளில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறை காற்றுடன் கனமழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வளசரவாக்கம், ஆலந்தூர், மாதவரம், புழல், செங்குன்றம், மணலி, கொளத்தூர், நங்கநல்லூர், வடபழனி, அசோக்பில்லர், கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மதுரவாயல், திருமுல்லைவாயல், முகப்பேர், அம்பத்தூர், திருவேற்காடு, ஆவடி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 12 மணிநேரத்தில் காற்றின் வேகமானது மணிக்கு 41 கிமீ முதல் 61 கிமீ வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை: ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு..!

சென்னையில் திடீர் கனமழை:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)