TN 12th Public Exams 2025 (Photo Credit: @TamilJanamNews X)

மார்ச் 03, சென்னை (Chennai News): தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்​களுக்கான பொதுத்​தேர்வு இன்று (மார்ச் 03) முதல் தொடங்​கு​கிறது. தமிழகம் முழுவதும் 3,316 தேர்வு மையங்களில், 4.24 லட்சம் மாணவியர் உட்பட, 8 லட்சத்து 21,057 மாணவர்கள், இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு (12th Public Exams 2025) எழுதுகின்றனர். இன்று முதல் 25ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. இன்று தமிழ் மொழி பாடத்தேர்வு நடைபெறவுள்ளது.மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. சொல்லச்சொல்லச் கேட்காத கள்ளக்காதல் பழக்கம்? தொழிலதிபரின் முகம் சிதைத்து கொடூர கொலை.. சென்னையில் ஷாக்.!

பாதுகாப்பு பணிகள்:

பொதுத்​தேர்​வுக்கான அறைக் கண்காணிப்​பாளர் பணியில் 43,446 ஆசிரியர்கள் ஈடுபடுத்​தப்பட உள்ளனர். மேலும், முறை​கேடுகளை தடுக்க 4,470 நிலையான மற்றும் பறக்​கும் படைகள் அமைக்​கப்​பட்​டுள்ளன. அதேபோல், மாவட்ட ஆட்சி​யர், முதன்மை, வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமை​யிலும் சிறப்பு கண்காணிப்​புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்​டுள்ளன. மேலும், சுமார் 154 வினாத்​தாள் கட்டுக்​காப்பு மையங்​களில் 24 மணிநேரம் ஆயுதம் தாங்கிய காவல்​துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடு​வார்​கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.