Rain Alert: காலை 10 மணிவரை சென்னை உட்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததன் காரணமாக, இன்று தமிழ்நாட்டில் வடக்கு கடலோர மாவட்டங்களில் மழைக்கு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 27, நுங்கம்பாக்கம் (Chennai News): தெற்கு ஆந்திரம் - வட தமிழ்நாடு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தனது நாளைய வானிலை (Tomorrow Weather) அறிவிப்பில் தெரிவித்து இருந்தது. DMK MP Kanimozhi: அண்ணா பல்கலை., மாணவி பலாத்கார விவகாரம்., "நெஞ்சமே பதறுது" - கனிமொழி கடும் கண்டனம்.!
காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்:
இந்நிலையில், இன்று காலை 10 மணி வரையில் (Today Weather) திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி-மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை தொடர்பான அறிவிப்பு:
pic.twitter.com/jP9X4eGmd3
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) December 27, 2024
(The above story first appeared on LatestLY on Dec 27, 2024 07:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

