செப்டம்பர் 07, நுங்கம்பாக்கம் (Chennai News): வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவியுள்ளது. அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 39 டிகிரி செல்சியஸும், கரூர் பரமத்தியில் 22 டிகிரி செல்சியசம் பதிவாகியுள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல மேலெடுத்து சுழற்சி நிலவுகிறது.
இன்றைய வானிலை (Today Weather):
இதனால் ஏழாம் தேதியான இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வானிலை: கடலூர், விழுப்புரம் உட்பட 8 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!
நாளைய வானிலை (Tomorrow Weather):
எட்டாம் தேதியை பொறுத்தவரையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 9, 10ம் தேதிகளிலும் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை (Chennai Weather):
தலைநகர் சென்னையை பொறுத்த வரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகலாம். மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில் இன்று முதல் ஒன்பதாம் தேதி வரை தென் தமிழக கடலோர பகுதி, குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.