Schemes Announced In The TN Legislative Assembly: தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய திட்டங்களின் விவரம் இதோ..!
தமிழகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் ஒதுக்கீடு செய்துள்ள திட்டங்களையும், அதன் நிதி விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.
ஜூன் 22, சென்னை (Chennai News): தமிழக சட்டப்பேரவையில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் (Rural Development and Panchayat Department) சில முக்கிய திட்டங்களின் தொகுப்புகளை இந்த பதிவில் பார்ப்போம்.
ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் புனரமைப்பு பணிகள்: தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எரிவாயு தகனமேடை: சமத்துவம் மற்றும் மத நல்லிணக்கத்தை முன்னேற்றும் வகையில் தமிழகத்தில் 10 எரிவாயு தகனமேடைகள் கட்ட சுமார் ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையம்: ரூ. 20 கோடி செலவில் தமிழகத்தின் ஊரக பகுதிகளில் 10 புதிய மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.
குழந்தைகள் நேய வகுப்பறைகள்: ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் 1100 குழந்தை நேய வகுப்பறைகள் ஊரக வளர்ச்சித் துறை மூலம் கட்டித்தரப்படும்.
நியாய விலைக்கடை: தமிழக கிராமப் புறங்களில் 500 நியாய விலைக்கடைகள் அமைக்க ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. Ginger Juice Benefits: இஞ்சி சாறு பருகுவாதல் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..? விவரம் உள்ளே..!
புதுக்கோட்டை ஊராட்சி அலுவலக வளாகம்: 2024-2025 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.10 கோடியில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலக வளாகம் கட்டப்படும்.
பள்ளிகளில் சுற்றுச்சுவர்: ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீட்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் 500 பள்ளிகளுக்கு சுற்றுச் சுவர் அமைக்கப்படும்.
சிறு பாலங்கள் அமைப்பு: ஊரக பகுதி சாலைகளில் குறுக்கே செல்லும் ஓடைகள் மற்றும் வடிகால்கள் மேல், ரூ.140 கோடி மதிப்பீட்டில் 500 சிறு பாலங்கள் கட்டப்படும்.
குளங்கள் அமைக்கும் பணி: ரூ. 250 கோடியில் மழை நீரை சேமிக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்திடவும் 5000 புதிய குளங்கள் அமைக்கப்படும்.
புதிய வாகனங்கள்: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பணிகளை கண்காணிக்க கள அலுவலர்களுக்கு ரூ. 44 கோடி செலவில் புதிய வாகனங்கள் வழங்கப்படும்.
கசிவுநீர் மற்றும் மரம் நடுதல் பணிகள்: 2500 கிராம ஊராட்சிகளில் மேய்க்கால் நிலங்களை பாதுகாத்து கசிவுநீர் குட்டைகள் மற்றும் மரம் நடுதல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள ரூ. 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jun 22, 2024 05:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

