Pakistan Terror Attack (Photo Credit: @IftiinFm X)

பிப்ரவரி 08, பெஷாவர் (World News): பாகிஸ்தான் நாட்டில், வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 12 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொலை (Pakistan Terrorist Attack) செய்தனர். வடக்கு வசீரிஸ்தானின் ஹசன் கேல் பகுதியில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 06) நடந்த தாக்குதலின் போது, ​​பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகளின் மறைவிடத்தை குறிவைத்து தாக்கினர். Goma Jailbreak: நூற்றுக்கணக்கான பெண்கள் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம்.. உலகை உலுக்கிய கொடூரம்.!

தீவிரவாதிகள் சுட்டுக்கொலை:

இதில், 12 தீவிரவாதிகளை சுட்டு கொன்றதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டது. இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவரும் கொல்லப்பட்டார். இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.