Nepal Landslide: நேபாளத்தில் நிலச்சரிவு.. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேருந்துகள்..!
நேபாளத்தில் பெய்த கனமழைக்கு மத்தியில், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
ஜூலை 12, காத்மாண்டு (World News): நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, திரிசூலி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளை சூழ்ந்துள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும் (Landslide) ஏற்பட்டு வருகின்றன. மத்திய நேபாளத்தில் அமைந்துள்ள மதன் – ஆஷ்ரித் நெடுஞ்சாலை (Madan-Ashrit) அருகே திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பயணிகள் பேருந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. TN Weather Update: இன்றைய மற்றும் நாளைய வானிலை குறித்த அறிவிப்பு.. மீனவர்களுக்கான எச்சரிக்கை.. விபரம் உள்ளே..!
இரண்டு பேருந்துகளிலும் பேருந்து ஓட்டுநர்கள் உட்பட மொத்தம் 63 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில் இந்த விபத்தில் இந்தியர்கள் 7 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. தொடர் மழை காரணமாகவும், திரிசூலி ஆற்றின் வலுவான நீரோட்டம் காரணமாக தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுவருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
Seven Indians died and 50 are missing after landslides swept two buses into the Trishuli River in Chitwan district, #Nepal.
Local reports indicate three passengers escaped by jumping out. pic.twitter.com/3EZ4kV4XFY
— Sneha Mordani (@snehamordani) July 12, 2024
(The above story first appeared on LatestLY on Jul 12, 2024 04:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

