Knife (Photo Credit: Pixabay)

ஜூலை 10, ஹிசார் (Haryana News): ஹரியானா மாநிலம், ஹிசாரில் (Hisar) உள்ள நார்னாண்ட் நகரத்தின் பாஸ் கிராமத்தில் கர்தார் நினைவுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் படிக்கும் 2 மாணவர்களை, பள்ளி முதல்வர் தலைமுடி வெட்டிக்கொண்டு பள்ளிக்கு வரச் சொல்லியுள்ளார். இதனால் கோபமடைந்த அவர்கள், இன்று (ஜூலை 10) பள்ளி முதல்வரை கத்தியால் குத்திக் கொலை செய்தனர். Pune: லாட்ஜில் 28 வயது டாக்டரை சீரழித்த இளைஞர்.. போதை மருந்து கொடுத்து பயங்கரம்.!

போலீஸ் விசாரணை:

இதுகுறித்து, தகவல் அறிந்த வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, பள்ளி முதல்வரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், தலைமுடியை வெட்ட சொன்னதால் 2 சிறார்கள், தங்கள் பள்ளி முதல்வரை கத்தியால் குத்திக் கொன்றதாக (Murder) தெரியவந்தது. இதுகுறித்து, ஹன்சி காவல் கண்காணிப்பாளர் அமித் யஷ்வர்தன் கூறுகையில், 2 சிறுவர்களும் பள்ளி முதல்வர் மீது கோபமாக இருந்ததால், இவ்வாறு நடந்து கொண்டுள்ளனர். மேலும், குற்றம் சாட்டப்பட்ட சிறார்கள் மைனர் என்பதால், இன்னும் கைது செய்யபடவில்லை எனவும் அவர் கூறினார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.