Railway Track | Court Judgement File Pic (Photo Credit: Pixabay)

ஜூன் 25, டெல்லி (Delhi News): இந்திய ரயில்வேயின் அலட்சியம் மற்றும் சேவையில் குறைபாடு உள்ளதாக நுகர்வோர் ஆணையம், ரயில் பயணத்தின் போது பயணப் பொருட்கள் திருடப்பட்ட ஒரு பயணிக்கு ரூ. 1.8 லட்சத்திற்கு மேல் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட அதன் பொது மேலாளருக்கு உத்தரவிட்டுள்ளது. Woman Death In Gym: ஜிம்மில் உடற்பயிற்சி செய்த பெண் ஜன்னல் வழியாக கீழே விழுந்து பலி..! வீடியோ வைரல்..!

கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜான்சி மற்றும் குவாலியர் இடையே மால்வா எக்ஸ்பிரஸின் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில், பயணம் செய்த ஒரு பயணியின் ரூ. 80 ஆயிரம் மதிப்புள்ள விலைமதிப்பற்ற பொருட்கள் அடங்கிய பையை, சில பயணிகள் திருடிச் சென்றதாக மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் (Consumer Court) புகார் அளித்தது.

அந்த புகாரில், 'பாதுகாப்பான மற்றும் வசதியான பயணம் மற்றும் பயணிகள் உடமைகளின் பாதுகாப்பு ஆகியவை ரயில்வேயின் கடமையாகும்' என்று கூறப்பட்டுள்ளது. அதன் தலைவர் இந்தர் ஜீத் சிங் மற்றும் உறுப்பினர் ரஷ்மி பன்சால் ஆகியோர் அடங்கிய ஆணையம் வழக்கு தொடர்ந்தது. இந்திய ரயில்வேயின் அலட்சியம் மற்றும் சேவையில் குறைபாடு காரணமாக ஒரு பயணியின் உடைமைகள் திருடப்பட்டுள்ளதாக கூறினர். இதனையடுத்து, சம்மந்தப்பட்ட பயணிக்கு ரூ. 80,000 அளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், இதில் வழக்குச் செலவுக்காக ரூ.8 ஆயிரம் மற்றும் இதனால் அவருக்கு ஏற்பட்ட சிரமம், துன்புறுத்தல் மற்றும் மனவேதனைக்காக ரூ. 20 ஆயிரம் நஷ்ட ஈடாக வழங்க நுகர்வோர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.