Wife Caught Husband (Photo Credit: @Manishkumarttp X)

ஜூன் 11, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள பிடிடி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பைசாபாத் சாலையில் அமைந்துள்ள ஒரு உணவகத்தில் இரவு நேரத்தில், பாரபங்கி பகுதியை சேர்ந்த ஒருவர் தனது காதலியுடன் உணவு சாப்பிட வந்தார். இதனை அறிந்த அவரது மனைவி, தனது அண்ணனுடன் அங்கு சென்றுள்ளார். Son Stabbed His Mother: தாயை கத்தியால் குத்திக்கொலை செய்த மகன்; காவல்நிலையத்தில் பரபரப்பு வாக்குமூலம்..!

இதனையடுத்து, மனைவி மற்றும் சகோதரர் தனது கணவனையும் அவரது காதலியையும் உணவகத்திற்கு வெளியே தூக்கி எறிந்தனர். பின்னர், இருவரையும் சாலையில் வைத்து சரமாரியாக (Husband and His Girlfriend Caught By Wife) தாக்கினர். மேலும், கணவனின் காதலியின் தலைமுடியை இழுத்து அவளை முன்னோக்கி இழுத்துச் சென்றார். இந்த சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அங்கிருந்த ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து இரு தரப்பினரும் மீதும் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.