Train Accident In UP: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து; 4 பேர் பலி.. பயணிகள் படுகாயம்..!

உத்தர பிரதேசத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Train Accident In UP: பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து; 4 பேர் பலி.. பயணிகள் படுகாயம்..!
UP Train Accident (Photo Credit: @SAM34043859 X)

ஜூலை 18, கோண்டா (Uttar Pradesh News): உத்தர பிரதேசம் மாநிலம், கோண்டா மாவட்டத்தில் சண்டிகர்-திப்ருகர் செல்லும் விரைவு ரயில் (Chandigarh Dibrugarh Express Train), மோதிகஞ்ச் ஜிலாகி என்ற இடத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 10-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக (Train Accident) தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து இன்று மதியம் 2.40 மணியளவில் நிகழ்ந்துள்ளது. இதில் பயணிகள் பலரும் விபத்தில் சிக்கிக்கொண்டனர். Beans Thengai Paal Poriyal Recipe: சுவையான பீன்ஸ் தேங்காய் பால் பொரியல் செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!

இதுகுறித்து, தகவல் அறிந்து சென்ற மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும், தீயணைப்பு படையினர் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 60-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கோர விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

(The above story first appeared on LatestLY on Jul 18, 2024 07:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).