Kerala Corona Update: கேரளாவில் இன்று 300 பேருக்கு கொரோனா உறுதி., 3 பேர் பலி.. மீண்டும் உயரும் பாதிப்பால் மக்களால் அச்சம்: மாநில அரசு அறிவிப்பு..!

உருமாறிய ஜேஎன் 1 ரக கொரோனா வைரஸின் பரவல் இந்தியாவில் வெகுவாக அதிகரித்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க, அரசும் அதுசார்ந்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

Kerala Corona Update: கேரளாவில் இன்று 300 பேருக்கு கொரோனா உறுதி., 3 பேர் பலி.. மீண்டும் உயரும் பாதிப்பால் மக்களால் அச்சம்: மாநில அரசு அறிவிப்பு..!
Corona Virus (Photo Credit: Pixabay)

டிசம்பர் 21, திருவனந்தபுரம் (Kerala News): கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் பரவத்தொடங்கி, 2021-ல் உலகளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸின் தாக்கமானது, கடந்த ஓராண்டுகளாக இல்லாமல் இருந்தது. இந்தியா கொரோனாவின் 3 அலைகளை எதிர்கொண்டு திணறிப்போனது. தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு பின்னர் கொரோனா குறைந்தது.

ஜேஎன்1 கொரோனா: இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸின் உருமாறிய புதிய ரக கொரோனா பரவுவது உறுதி செய்யப்பட்டது. கேரளாவில் ஜேஎன்1 ரக கொரோனா பரவுவது உறுதி செய்யப்பட்டது. இதனால் அம்மாநில அரசு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கேரளாவில் மீண்டும் பரவல்: மேலும், கொரோனா சார்ந்த பரிசோதனைகளையும் தீவிரப்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 300 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றனர். Girl Delivery Baby Rescued From Srivaikuntam: ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது: தாய்-சேய் நலம்.! 

கட்டுப்பாடுகள் தீவிரம்: இதனால் இந்தியாவின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 2669 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் அதிகரித்த கொரோனா கர்நாடகாவிலும் அதிகரித்ததால், அங்கு முகக்கவசம் அணிதல் உட்பட கொரோனா தடுப்பு விஷயங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அறிவுறுத்தல்: மத்திய அரசும் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக மாநில அரசுகளுக்கு கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தியும் இருந்தது. ஆர்டிபிசிஆர் சோதனைகளை அதிகப்படுத்தவும் கேட்டுக்கொண்டது.

மக்கள் அச்சம்: கடந்த ஆண்டில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு காரணமாக இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில், மீண்டும் கொரோனா அதிகரிப்பது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கை எதிர்கொள்ள வேண்டி இருக்குமா? அத்தியாவசிய வேலைகளுக்கு என்ன செய்வது? எனவும் பீதி அடைந்து வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Dec 21, 2023 10:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).