Cow Smuggling: பசு கடத்தல் முயற்சி - உள்ளூர் வாசிகள் 4 பேரை வழிமறித்து தாக்குதல்..!

அரியானாவில் இருந்து ராஜஸ்தானிற்கு வாகனத்தின் மூலம் பசுக்களை கடத்திச் சென்று கொண்டிருக்கும் போது உள்ளூர் மக்கள் வழிமறித்து அவர்களை அடித்து உதைத்துள்ளனர்.

Cow Smuggling: பசு கடத்தல் முயற்சி - உள்ளூர் வாசிகள் 4 பேரை வழிமறித்து தாக்குதல்..!
Cow (Photo Credit: @naveengarewal X)

மார்ச் 27, ஜெய்ப்பூர் (Rajastan News): ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆல்வார் மாவட்டத்தில், குஷோரா காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பசுக்களை (Cow) ஏற்றிக்கொண்டு ஒரு வாகனத்தில் 4 பேர் இன்று வந்துள்ளனர். இவர்களை உள்ளூர் மக்கள் சிலர் வழிமறித்து விசாரித்த போது, தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து, உள்ளூர் மக்கள் அவர்களை சரமாரியாக அடித்து தாக்கினர். அவர்கள் 4 பேரும், அரியானாவில் இருந்து ராஜஸ்தானுக்கு பசுக்களை கடத்திச் சென்றுள்ளது தெரியவந்தது. Elderman Arrested Under POCSO Act: சிறுமிக்கு பாலியல் தொல்லை – 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்..!

இதுதொடர்பாக, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். உள்ளூர் மக்களிடம் அடிபட்ட அவர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். வாகனத்தில் ஏற்றி வந்த ஏழு பசுக்களையும் மீட்டு, பசு காப்பகத்திற்கு (Cow Shelter) பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.

இதனையடுத்து, காவல்துறையினர் அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் 4 பேரும் அரியானா மாநிலத்தில் உள்ள நூ மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டது. மேலும், அவர்களின் மீது பசு கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(The above story first appeared on LatestLY on Mar 27, 2024 04:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).