Telangana Bike Hit By Man (Photo Credit: @TeluguScribe X)

ஜூலை 04, கஜ்வெல் (Telangana News): தெலங்கானா மாநிலம், கஜ்வெல் பிரஜ்னாபூரைச் சேர்ந்த ஷ்ரவன் (வயது 18) என்ற வாலிபர், தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ​​சாலையோரம் இருந்த கடையில் இருந்து சாலையைக் கடக்கும் நபரை அதிபயங்கரமாக மோதியுள்ளார். இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்திருந்த ஷ்ரவன் சாலையில் டிவைடரில் (Divider) விழுந்து தலையில் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இருவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. Church Priest Arrested For Sexually Harassing Minor Girl: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; தேவாலய பாதிரியார் போக்சோவில் கைது..!