Maharashtra Bandh 2024: நாளை மகாராஷ்டிரா பந்த்.. பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து போராட்டம்..!

மகாராஷ்டிராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து, நாளை மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Maharashtra Bandh 2024: நாளை மகாராஷ்டிரா பந்த்.. பெண்களுக்கு எதிரான குற்றங்களை எதிர்த்து போராட்டம்..!
Maharashtra Bandh 2024 (Photo Credit: @guaranteenews X)

ஆகஸ்ட் 23, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிர மாநிலத்தில் நாளை (ஆகஸ்ட் 24) மகாராஷ்டிரா பந்த் (Maharashtra Bandh) நடத்த அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. கொல்கத்தாவின் ஆர். ஜி. கர் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை வழக்குக்குப் பிறகு, நாடு முழுவதும் மருத்துவர்கள் தங்கள் பாதுகாப்பைக் கோரி போராட்டம் நடத்தி வரும் நேரத்தில் இந்த அழைப்பு வந்துள்ளது. UN Chief About PM Modi's Ukraine Visit: பிரதமர் மோடி உக்ரைன் பயணம்.. போரின் முடிவுக்கு உதவும் என ஐநா நம்பிக்கை..!

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை அடுத்து மகா விகாஸ் அகாதி கூட்டணி பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூர் (Badlapur) பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி அன்று இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை (Sexual Abuse) செய்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஆயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி ரயில் தண்டவாளங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், இது வன்முறையாக மாறியது. ரயில் நிலையம் மற்றும் பத்லாபூரின் பிற பகுதிகளில் கல் வீச்சு சம்பவங்கள் நடந்தன. இதன் விளைவாக குறைந்தது 25 காவல்துறையினர் படுகாயமடைந்தனர். கலவரம் தொடர்பாக, வன்முறையில் ஈடுபட்ட 72 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதன்காரணமாகவே, நாளை  மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

(The above story first appeared on LatestLY on Aug 17, 5119 05:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).