ஜூலை 20, மகாராஷ்டிரா (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தின் விவசாயத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே. இவர் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்ட நிலையில், செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ வைரலாகியுள்ளது. இது குறித்த வீடியோவை எதிர்க்கட்சியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவரின் பேரன் ரோஹித் பவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
மராத்தியில் ரோஹித் பவர் கூறியது :
தனது எக்ஸ் தள பதிவில், " எண்ணற்ற விவசாயப் பிரச்சினைகள் நிலுவையில் இருந்தாலும், மாநிலத்தில் தினமும் 8 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டாலும், பாஜகவுடன் கலந்தாலோசிக்காமல் ஆட்சியில் இருக்கும் தேசியவாதக் கட்சியால் எதுவும் செய்ய முடியாது என்பதால் வேறு எதுவும் செய்ய முடியாமல், விவசாய அமைச்சருக்கு ரம்மி விளையாட நேரம் இருப்பதாகத் தெரிகிறது. பயிர் காப்பீடு, கடன் தள்ளுபடி மற்றும் விலை ஆதரவு கோரி விவசாயிகள் எழுப்பும் அவநம்பிக்கையான வேண்டுகோளை இந்த தவறான வழிகாட்டப்பட்ட அமைச்சர்களும் அரசாங்கமும் எப்போதாவது கேட்பார்களா? 'ஏழை விவசாயிகளின் வயல்களுக்கு எப்போதாவது வாருங்கள், மகாராஜ்' " என்று மராத்தியில் தெரிவித்துள்ளார்.
ரோஹித் பவரின் பதிவு :
“#जंगली_रमी_पे_आओ_ना_महाराज…!”
सत्तेतल्या राष्ट्रवादी गटाला भाजपला विचारल्याशिवाय काहीच करता येत नाही म्हणूनच शेतीचे असंख्य प्रश्न प्रलंबित असताना, राज्यात रोज ८ शेतकरी आत्महत्या करत असताना सुद्धा काही कामच नसल्याने कृषिमंत्र्यांवर रमी खेळण्याची वेळ येत असावी.
रस्ता भरकटलेल्या… pic.twitter.com/52jz7eTAtq
— Rohit Pawar (@RRPSpeaks) July 20, 2025