பிப்ரவரி 17, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (TSRTC) நிர்வாக இயக்குநர் சஜ்ஜனார், சமூக ஊடகங்களில் பல வீடியோக்களை பகிர்ந்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவைப் பகிர்ந்து அதில், "அதிர்ஷ்டசாலி.. அவர் கண் இமைக்கும் நேரத்தில் வெளியே வந்துவிட்டார்" என்று கூறினார். "குழந்தைகளை சாலைகளில் அழைத்துச் செல்லும்போது பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்." கவனக்குறைவாக இருப்பவர்கள் விபத்துகளில் சிக்க அதிகம் வாய்ப்புள்ளது. "இந்தக் குழந்தையைப் போல எல்லோரும் அதிர்ஷ்டசாலிகள் அல்ல" என்று அவர் வீடியோவின் கீழ் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஒரு குழந்தை சாலையில் நடந்து செல்லும் போது, ஒரு லாரி அதிவேகத்தில் வருகிறது. அருகில் இருக்கும் அவரது தந்தை குழந்தையை இழுக்க முயல்கிறார். அப்போது, நூலிழையில் அந்த குழந்தை விபத்தில் இருந்து தப்பித்தார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. Groom Dies Of Heart Attack: குதிரையில் அமர்ந்தபடியே உயிரிழந்த மணமகன்.. திருமண வீடு, துக்க வீடாக மாறிய சோகம்..!
வீடியோ இதோ:
అదృష్టవంతుడు.. రెప్పపాటులో బయటపడ్డాడు.
చిన్నారులను రహదారుల వెంట తీసుకెళ్లేటప్పుడు తల్లిదండ్రులు జాగ్రత్తగా ఉండాలి. ఏమాత్రం నిర్లక్ష్యంగా ఉన్న వారు ప్రమాదాల బారిన పడే అవకాశం ఉంది. అందరికీ ఈ బుడ్డోడిలా అదృష్టం వరించదు. pic.twitter.com/p6VCewnMwl
— V.C. Sajjanar, IPS (@SajjanarVC) February 16, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)