வரதட்சணை கேட்டு 8 மாத குழந்தையை தலைகீழாக தொங்கவிட்ட தந்தை.. பதறவைக்கும் வீடியோ.!
உத்திரபிரதேசத்தில் வரதட்சணைக்காக தனது 8 மாத பச்சிளம் குழந்தையை தந்தை தலைகீழாக தொங்கவிட்டு தூக்கிச்சென்ற அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
ஜூலை 25, உத்திரப் பிரதேசம் (Uttar Pradesh News): உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சு. இவர் தனது மனைவியிடம் நகை, கார், பணம் வேண்டும் என வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்துள்ளார். தனது மனைவியின் குடும்பத்தினரிடமும் இது குறித்து சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பெண்மணி மறுப்பு தெரிவிக்கவே அவ்வப்போது தகராறு செய்து வந்தவர், சம்பவத்தன்று மனைவியிடமிருந்து தனது 8 மாத ஆண் குழந்தையை பிடுங்கி தலைகீழாக தொங்கவிட்டு சாலையில் தூக்கி சென்றுள்ளார். வரதட்சணைக்காக பெற்ற குழந்தை என்றும் பாராமல் மனிதநேயமின்றி தந்தை செய்த செயலின் வீடியோ இணையத்தில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவரது மனைவி காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குழந்தையை தலைகீழாக தொங்கவிட்டு தந்தை தூக்கிச்சென்ற வீடியோ :
🚨 "जब पिता ही जल्लाद बन जाए, तो भगवान भी चुप रह जाता है!"
यूपी के रामपुर में 8 महीने के मासूम को…
उसके ही ‘पिता’ ने टांगों से पकड़कर
गांव में ऐसे घुमाया जैसे वो इंसान नहीं,
कोई कचरा हो!
👶 बच्चा चीखता रहा... तड़पता रहा...
पर वो हैवान उसे खिलौने की तरह उछालता रहा!
वीडियो वायरल!… pic.twitter.com/pbRq9x2XKN
— Arun Kumar (@ArunKum96527953) July 23, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 25, 2025 03:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

