ஜூலை 19, மும்பை (Sports News): இந்திய கிரிக்கெட் அணியில் ஆல் ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டு வருபவர் தான் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya). மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக உருவெடுத்ததில் இருந்தே பல சர்ச்சைகளுக்கு பேர் போன ஹர்திக் பாண்டியாவினை, அவரின் மனைவி நடாசா ஸ்டான்கோவிச்சை (Natasha Stankovic) பிரிந்து சென்று விட்டதாக பல வதந்திகள் பரவி வந்தன. அதன்படி இருவரும் தனித்தனியாக எடுத்த புகைப்படங்களை மட்டுமே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டும் வந்திருந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பிரிவதாக தங்களது இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். அதில், "நான்கு ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த நிலையில் தற்போது நாங்கள் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். இது எங்கள் இருவருக்கும் நல்லது என நம்புகிறோம். எங்களது மகன் அகஸ்தியா எங்கள் இருவரின் வாழ்க்கையிலும் தொடர்ந்து இருப்பார். அவரின் மகிழ்ச்சிக்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று உறுதி செய்கிறோம். இந்த கடினமான நேரத்தில் உங்கள் ஆதரவினை கேட்டுக்கொள்கிறோம்" என பதிவிட்டுள்ளனர். Bike Accident: பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து.. தாய், மகன் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)