Robin Uthappa: ரூ.23 லட்சம் பண மோசடி.. முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட்..!

பெங்களூருவில் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்காக உரிய PF தொகையை செலுத்தவில்லை என்று ராபின் உத்தப்பாவை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Robin Uthappa: ரூ.23 லட்சம் பண மோசடி.. முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட்..!
Robin Uthappa (Photo Credit: @SATISHMISH78 X)

டிசம்பர் 21, பெங்களூரு (Sports News): இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா (Former Cricketer Robin Uthappa), பெங்களூருவில் சென்டாரஸ் லைஃப்ஸ்டைல் ​​பிராண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (Centaurus Lifestyle Brands Private Ltd) எனும் டெக்ஸ்டைல்ஸ் தொடர்பான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர், நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு முறையாக பிஎப் (PF) பணம் செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது. சுமார் ரூ.23 லட்சம் வரையில் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, உத்தப்பாவுக்கு நோட்டீஸ் வழங்க பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்திற்கு அதிகாரிகள் சென்றுள்ளனர். ஆனால், அவர் அங்கு இல்லை எனக்கூறப்படுகிறது. இதனையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட நிறுவனத்தின் நிறுவனர் உத்தப்பா மீது கைது வாரண்ட் (Arrest Warrant) பிறப்பித்து, அவரை கைது செய்யுமாறு EPFO ஆணையர் ஷடாக்ஷிரி கோபாலா ரெட்டி, புலகேசி நகர் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். RSA Vs PAK 2nd ODI: 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அபார வெற்றி.. கிளாசனின் போராட்டம் வீண்..!

ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட்:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 21, 2024 03:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).