அக்டோபர் 07, கோவை (Coimbatore News): கோயம்புத்தூர் வ.உ.சி.மைதானம் கோவை மக்களின் பொழுது போக்கு இடங்களில் ஒன்று. இங்கு அடிக்கடி பொருட்காட்சி, சர்க்கஸ் உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் கடந்த மாதம் முதல் இங்கு கடல் கன்னி கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் மீன் சுரங்கம், கடல் கன்னி, வெளிநாட்டு விளையாட்டு அம்சங்கள், பேய் வீடு, 3D கண்காட்சி அரங்குகள், ஸ்னோ வேர்ல்ட், ஆடைகள் மற்றும் விட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக்கான அரங்குகள், உணவுப் பொருட்கள், உணவு அரங்கங்கள் என மக்களைக் கவரும் வகையிலான பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் இந்த கண்காட்சிக்கு படையெடுக்கின்றனர். இந்த கண்காட்சியைக் கண்டுகளிக்க ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வானிலை: இடி-மின்னலுடன் கனமழை முதல் மிககனமழை; வெளுத்துவாங்கப்போகும் மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
கோவையில் காட்சி தந்த கடல் கன்னிகள்:
கோவை வஉசி மைதானத்தில் நடந்து வரும் கடல் கன்னி கண்காட்சி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வருகிறது.#Covai #Coimbatore #TamilNews pic.twitter.com/oHJHsSrt3r
— Backiya (@backiya28) October 7, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)