Namakkal Woman Fell Down Private Bus (Photo Credit: Facebook)

ஜூலை 04, ராசிபுரம் (Namakkal News): நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே தனியார் பேருந்தில் (Private Bus) இருந்து தவறி விழுந்த பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி பகுதி வளைவில் பேருந்து திரும்பியபோது, பேருந்தில் நின்றுக் கொண்டிருந்த சாரதா என்ற பெண் தனது மகளின் திருமணத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு பேருந்தில் செல்லும்போது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தார். உடனே பேருந்து நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் ஓடிச் சென்று கீழு தவறி விழுந்து படுகாயங்களுடன் இருந்த சாரதாவை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். Bomb Threat To Parangimalai Metro Station: பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; சுமார் 1 மணிநேரம் தேடுதல் வேட்டை..!

நன்றி. சன் டிவி