அக்டோபர் 24, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நீடிக்கும் போர், பங்குச்சந்தையில் தங்கம், வெள்ளி மீதான முதலீடுகள், தங்கம்-வெள்ளியின் தினசரி உற்பத்தி மற்றும் விற்பனை எதிர்பார்ப்பு நிலவரம் உட்பட பல்வேறு காரணிகள் கொண்டு ஒவ்வொரு நாளும் தங்கம்-வெள்ளியின் விலை (Gold Silver Rate Today) நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தங்கம், வெள்ளி விலை என்பது கணிசமான தொகை குறைந்து இருந்தது. ஆனால், தங்கமும், வெள்ளியும் 2025ல் போட்டிபோட்டு உயர்ந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக தங்கம் விலை சென்னையில் சவரனுக்கு ரூ.30,000 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.90 ஆயிரத்தை கடந்துள்ளது. வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.25,000 என்ற மதிப்பில் இருந்து தற்போது ரூ.1,80,000 என்ற விலை உச்சத்தை சந்தித்துள்ளது.
தங்கம்-வெள்ளி விலை உயர காரணம் என்ன? (Gold Silver Rate):
உலகளாவிய பங்குசந்தையில் தங்கம், வெள்ளி மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில், நாடுகள் அளவில் சீனா அளவுக்கு அதிகமாக தங்கத்தை வாங்கி குவிகிறது. இதனால் தங்கத்தின் மீதான எதிர்பார்ப்பு அதன் தினசரி உற்பத்தியை தாண்டி இருப்பதால், தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், வெள்ளி பொருட்களை மின்சார பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்துகின்றன. சமீபகாலமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர், எலக்ட்ரிக் கார் என மின்சாதன பொருட்களின் உற்பத்தி புதிய அத்தியாயத்தில் பயணம் செய்து வருகிறது. இதனால் வெள்ளியின் தேவையில் தினமும் கிடைக்கும் அளவில் பாதிக்கும் மேல் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. கொள்முதல் அதிகமானதால் வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. Chennai News: அசந்து உறங்கிய தாய்.. மழைநீர் குட்டையில் மூழ்கி இரண்டரை வயது குழந்தை பலி.. மழைக்காலத்தில் பெற்றோர்களே கவனம்.!
தங்கம் விலை (Today Gold Rate in Chennai) & இன்று வெள்ளி விலை (Silver Price in Chennai):
இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, சவரன் தங்கம் ரூ.92,320 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கம் விலை ரூ.40 உயர்ந்து ரூ.11,540 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ரூ.3,000 குறைந்து ரூ.1,71,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது.