Tiruvannamalai Land Slides (Photo Credit: @dt_next / @SVijayarajan9 X)

டிசம்பர் 01, திருவண்ணாமலை (Tiruvannamalai News): வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் தொடர் கனமழையை எதிர்கொண்டது. இதனால் விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. School College Holiday: கனமழை, வெள்ளம் காரணமாக 12 மாவட்டங்களில் விடுமுறை; முழு விபரம் இதோ.! 

பாறை உருண்டு விழுந்தது:

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மலையடிவார பகுதியில் வ.உ.சி நகர் இருக்கிறது. இந்த பகுதியில் தொடர் மழை காரணமாக 3 வீடுகள் பூமிக்குள் புதைந்துள்ளது. இந்த வீட்டில் பெண்கள், குழந்தைகள் என 7 பேர் வசித்து வந்ததாக தெரியவருகிறது.

சிக்கிக்கொண்ட 7 பேர்:

இதனால் 7 பேர் அங்கு சிக்கிக்கொண்டதாக தெரியவருகிறது. பெரிய அளவிலான பாறை ஒன்று விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மீட்பு பணிகள் அங்கு நடைபெறுகிறது. பாறை உருண்டு வீடு மீது விழுந்ததால், மீட்புப் பணிகள் தாமதம் அடைந்துள்ளது.

7 பேர் நிலைமை தெரியவில்லை என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவிப்பு: